search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் விலை"

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். டெண்டர் முறையில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.35-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 63 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 2 ஆயிரத்து 52 தேங்காய்களும், 21 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.1.40-ம், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.6.85-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 4 டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 65-க்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரம் விற்பனை உரிமம் ரத்து என்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தகவல் தெரிவித்துள்ளார்.
    • அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து ள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களு பயிர் செய்து வருகிறது. மேலும் ஏற்க னவே உள்ள பயிர்க ளுக்கு விவசாயிகள் உர ங்கள்இட்டும் பராமரித்து வருகின்றனர். தற்சமயம் இம்மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1189 மெ.டன், டி.ஏ.பி 939 மெ.டன். பொட்டாஷ் 1421 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 889 மெ,டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 5362 மெ.டன் அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசா யிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும். உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்ப த்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது. மேலும் உர விற்பனை யாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது வழங்கிட வேண்டும். மேற்கண்ட அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது 1985- உரச்சட்டத்தின் அடிப்படையில் கடுமை யான நடவடிக்கை மேற்கொ ள்வதுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தியாகதுருகம் பகுதி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி எச்சரிக்கை விடுத்தாார்.
    • அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பகுதியில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையொட்டி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முறையாக உர உரிமம் பெற்று விற்பனை செய்யப்படுகிறதா? உரம் இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு உரக்கடையில் இருப்பு உள்ளதா? மேலும் விற்பனை முனையக் கருவியில் உள்ளவாறு உரங்கள் இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களை விற்பனை செய்யும் போது அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் கடைகளுக்கு முன்பாக ரசாயன உரங்களின் விலை பட்டியலை வைக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு, வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×